
எழுத்து மூலம் வாக்குறுதி தரும் வரையில் போராட்டம் தொடரும் ,கடல் தொழில் அமைச்சரின் வார்த்தையை ஏற்க மாட்டோம் என யாழ் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள மீனவர் போராட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மேலும் அமைச்சர்,மற்றும் அதிகாரிகளின் வாய் வார்த்தைகளை நம்ப மாட்டோம்.ஏற்க மாட்டோம்.
அரச சம்பளம் பெறும் கடல் படை தனது கடமையை சரியாக செய்ய வேண்டும்.
அதிக சக்தி வாய்ந்த இயந்திரம் பொருதப்பட்ட படகுகளில் இந்திய மீனவர்கள் இங்கே வந்து செல்கின்றனர்.
அவர்களின் படகுகள் உள்ளூர் மீன்வர்களின் படகு மீது மோதினால் எங்கள் படகுகள் நொறுங்கி விடும் .
இவ்வளவு நாளும் அமைதியாக போராடி வருகின்றோம்,நாளாக நாளாக நாம் எமது போராட்டம் உக்கிரம் அடையும்.கடல் பற்றி எரியும்.
மேலும் அரசியல் நோக்கங்களுக்காக இந்த போராட்டத்தில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம்.இது மக்கள் போராட்டம் என தெரிவித்துள்ளனர்.
மாதகலில் வலுக்கிறது மீனவர்கள் போராட்டம் – வலைகள், படகுகள் வீதியில் குவிப்பு!