
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட மாங்காடு சரஸ்வதி மகாவித்தியாலயத்தின் அதிபரை
இடமாற்றித்தருமாறு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இவ்வருடம் நூற்றாண்டு விழாக்காணும் பாடசாலை காலவதியான அதிபரும் சீரளிந்த மாங்காடும், வேண்டும் வேண்டும் புதிய தகுதியான அதிபர், பாடத்திற்கு அமைய ஆசியரிர்கள், உயர் அதிகாரிகளே அதிபருக்குத் துணைபோக வேண்டாம், செயலாளர் அவர்களே ஆளுமையுடைய அதிபரை உடன் நியமி உள்ளிட்ட பல வாசகங்கள் எழுத்தப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மாங்காடு சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் குறித்த பாடசாலை அதிபரிடம் கருத்துக் கேட்பதற்காக பாடசாலைக்கு ஊடகவியலாளர்கள் சென்றபோது, பாடசாலையின் உட்பக்கமாக வாயிற்கதவு பூட்டப்பட்டிருந்ததாகவும்,
அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, வலயக்கல்வி அலுவலக அதிகாரிகளிடம் தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்து, அவர் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


மாதகலில் வலுக்கிறது மீனவர்கள் போராட்டம் – வலைகள், படகுகள் வீதியில் குவிப்பு!