
பதவியிலிருந்து விலகுவதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் அவரது மகன் இன்று காலை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் வரை தான் பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தனக்கும் தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால், தான் பதவியை இராஜினாமா செய்வேன் என இராஜாங்க அமைச்சர் முன்னதாக தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மருத்துவ பீட மாணவர்கள் விவகாரம் – இராஜாங்க அமைச்சரின் மகன் உள்ளிட்டவர்களுக்கு விளக்கமறியல்