முள்ளிவாய்காலுக்கு செல்வதற்கான பேருந்து ஒழுங்கு அறிவிப்பு

இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழ் மக்கள் கறுப்பு தினமாக அனுஸ்டிக்கவுள்ளனர்.

இதனையடுத்து நாளை 4 ஆம் திகதி காலை 10 மணியளவில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் மற்றும் வடகிழக்கு சிவில் சமூகங்களின் ஏற்பாட்டில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட இருக்கின்றது.

குறித்த போராட்டத்திற்கு செல்வதற்கான வாகன ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கில் இருந்து நாளைய போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்போர், இவ்வாகன ஒழுங்குகள் தொடர்பில், 771780509 என்னும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பேருந்துகளில் செல்வதற்கான ஒழுங்குகளை செய்ய முடியும் என ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *