சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது: அஜித் ரோஹன

கொழும்பு, பெப் 3: சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வும், புதுப்பிக்கவும் மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வந்தவர்களில் சிலர் போதைப் பொருள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் ” சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வும், புதுப்பிக்கவும் மருத்துவ சான்றிதழ்களை பெற வந்த, 1,213 பேரில் 145 பேர் போதைப்பொருள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. போதைப்பொருள் பாவிக்கும் சாரதிகளை கைது செய்யும் வகையிலான விசேட நடவடிக்கைகள் இந்த வாரம் முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இவர்களில் பெரும்பாலானவர்கள் லொறி சாரதிகள். அவர்களில் 21 பேர் பேருந்து சாரதிகள். இது ஆபத்தான நிலை என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *