
மக்களின் யோசனைகள் பெறப்பட்ட பின்னரே நாம் திட்டங்களை வகுத்துள்ளோம் என நிதி அமைச்சர் பசில் ராஜ பக்ச தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலார்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நம் நாட்டிற்கு தற்போது அவசியமாக தேவைப்படும் டொலர். இந்தப் பற்றாக்குறை குறித்து இந்திய வங்கியுடன் இன்று நாம் ஒப்பந்தம் கைச்சாத்திட்டோம்.
நாம் இவ் அரசாங்கம் வந்த பின் அபிவிருத்தி திட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளோம்.
இந்த திட்டத்தில் மக்கள் கலந்து கொள்வது முக்கியமான விடயம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமம் மற்றும் பிரதேச அபிவிருத்திக்கு அரசாங்கம் உதவி வழங்கும்.
மற்றும் கிராம சேவகர், பிரதேச அதிகாரிகளுடன் கலந்துரையாடி செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.- என்றார்.