கல்முனையில் வியாபார அனுமதிப்பத்திரம் பெற அவகாசம்: தவறின் தண்டப்பணம்!

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் இயங்கி வருகின்ற வர்த்தக நிலையங்கள், கடைகள் மற்றும் வியாபார ஸ்தாபனங்களுக்கான நடப்பு ஆண்டுக்குரிய வியாபார அனுமதிப் பத்திரத்தை எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக பெற்றுக் கொள்ளுமாறு கல்முனை மாநகர சபை அறிவித்துள்ளது.

இக்காலப்பகுதிக்குள் வியாபார அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளாத வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகர சபை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் கல்முனை மாநகர சபையினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிவித்தலில்,

கல்முனை மாநகர சபையின் வருடாந்த வியாபார அனுமதிப் பத்திரம் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்குள் பெறப்பட வேண்டும். எனினும் வர்த்தகர்களின் நலன்கருதி இதற்கான கால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை நீடிப்பட்டிருக்கிறது.

இக்காலப் பகுதிக்குள் அனைத்து வர்த்தகர்களும் கண்டிப்பாக வியாபார அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இக்காலப்பகுதிக்குள் வியாபார அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ளத் தவறும் வர்த்தக நிலையங்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்கள் மீது, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், வழக்குச் செலவு உட்பட 3,000 ரூபா தண்டப்பணமும் அறவிடப்படும் என்று அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *