
நாட்டில் பால்மா இல்லை, எண்ணெய் இல்லை, பொருட்களின் விலை உயர்வு ஆகியவை ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் கோடி கணக்கில் செலவழித்து இச் சுதந்திர தின கொண்டாட்டம் அவசியமா என நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏப்ரல் மாத குண்டு வெடிப்பு சம்பந்தபட்டவர்களிற்கு தண்டனை உண்டு என கடந்த வருட சுதந்திரத்தின் போது ஜனாதிபதி கூறினார். ஆனால், அவ் குற்றவாளிகளை கைது செய்தனரா? இல்லை.
கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று வழங்கிய உறுதி மொழிகளுக்கு எந்த பதிலும், எந்த நடவடிக்கையும் இன்று வரை எடுக்கவில்லை.
தற்போது, விவசாயிகளிற்கு உரமில்லாமல், மின்சாரத்திற்கு எண்ணெய் இல்லாமல் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட நாடாக மாற்றியுள்ளனர்.
இச் சுதந்திரம் யாருக்கு? ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு மட்டுமே. சுதந்திர விழா நடக்க வேண்டும்தான். ஆனால் இவ்வளவு செலவு செய்து இக் கொரோனா கால கட்டத்தில் இவ் விழா அவசியமா?
கடன் பிரச்சினை இருக்கின்ற நேரத்தில் நிதி அமைச்சர் என்ன செய்கிறார். கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக்க முயற்சி எடுக்கிறாரா? இன்று நாடு ஏற்பட்டுள்ள நிலை என்ன?
இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர் பெறுவது வெற்றி அல்ல அது மற்றவர்களிடம் பிச்சை எடுப்பது.
நாட்டில் பால்மா இல்லை, எண்ணெய் இல்லை, பொருட்களின் விலை உயர்வு ஆகியவை ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் கோடி கணக்கில் செலவழித்து இச் சுதந்திர தின கொண்டாட்டம் அவசியமா?
கடந்த வருடம் ஊரடங்கு காரணமாக புத்தாண்டு கொண்டாட முடியாமல் போனது. ஆனால், இந்த வருடம் ஊரடங்கு இல்லை. எனினும், புத்தாண்டு கொண்டாட முடியாது போனதற்கு காரணம் விலை உயர்வு, எரிவாயு இல்லை, எண்ணெய் இல்லை, மின்சாரம் இல்லை.
இவ் அரசாங்கத்தில் ஒரு பக்கம் ராஜபக்ஷ குடும்பத்தினர், இன்னுமொரு பக்கம் சுதந்திரம் கட்சியினர் இருக்கின்றனர். ஆனால் தேர்தல் வரும் போது ராஜபக்ஷ குடும்பத்தினர் மாத்திரமே தனியாக நிற்பார்கள்.- என அவர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் ஞானசார விடுத்துள்ள கோரிக்கை!