யாழ்.கைதடியில் பெற்றோல் வழங்க மறுத்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு மிரட்டல்! SamugamMedia

திருத்த வேலை காரணமாக பெற்றோல் வழங்க மறுத்ததால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு   மோட்டார் சைக்கிள் வந்த இருவர் மிரட்டல் விடுத்துள்ளனர்.

யாழ்.கைதடி பொன்னம்பலம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்தச் சம்பவம் இன்றிரவு 9.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

நாவற்குழி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றது போன்றதொரு  சம்பவம் தங்களுக்கும் இடம்பெறும் எனவும் அவர்கள் இதன்போது பிரட்டல் விடுத்ததாக எரிபொருள் நிலைய முகாமையாளர் தெரிவித்தார்.

 சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *