தாய்லாந்தில் இளைஞர் ஒருவர் 8 பெண்களை திருமணம் செய்து ஒன்றாக வசித்து வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஓங் டாங் சோரூட் என்பவர் டாட்டூ கலைஞராக பணியாற்றி வருகிறார். இவர் 8 பெண்களை வரிசையாக திருமணம் செய்து ஒரே வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரின் அனைத்து மனைவிகளும் சோரூட் மீது மிகுந்த காதலுடன் இருக்கின்றனர் எனவும் இவர்களுக்கிடையில் எவ்வித சண்டை, பொறாமை போன்றன எதுவும் வருவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவர் தனது காதல் கதையை ஊடகம் ஒன்றுக்கு பகிர்ந்துள்ளார்.
அதில் சோரூட், தனது அனைத்து மனைவிகள் மீது அளவு கடந்த காதல் வைத்துள்ளாராம். 8 மனைவிகளை பார்த்த இடத்திலேயே அவரது மனதை பறிகொடுத்துள்ளேன்.
முதல் மனைவியை ஒரு நண்பரின் திருமணத்தில், இரண்டாவது மனைவியை சந்தையிலும், மூன்றாவது மனைவியை மருத்துவமனையிலும் 4, 5 ஆவது மற்றும் 6வது மனைவியை இன்ஸ்டாகிராம், பேஸ்புக் தளத்திலும் 7வது மனைவியை அவரது தாயுடன் கோயிலுக்கு செல்லும் போதும், எட்டாவது மனைவியை சுற்றுலா சென்ற இடத்தில் பார்த்து காதல் வயப்பட்டு திருமணம் செய்தேன் எனத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது 8 மனைவிகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.