இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் இன்றாகும்!

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் இன்றைய தினம் கொண்டாடப்படுகின்றது.

73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று காலை நடைபெறவுள்ளன.

நிகழ்வுகளில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை மற்றும் கலை, கலாசார நிகழ்வுகள் ஆகியன இடம்பெறவுள்ளன.

இன்று காலை 8 மணியளவில் ஜனாதிபதியின் வருகையுடன் பிரதான நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அதனை தொடர்ந்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளார்.

இன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன் சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் இன்று அதிகாலை முதல் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிலைமைக்கு மத்தியில், இம்முறை சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றியே சுதந்திர தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *