யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் போக்குவரத்து சேவைகள் வழமை போன்று இடம்பெற்று வருகின்றது.

பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ள தொழிற்சங்க வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் அரச மற்றும் தனியார் பஸ் சேவைகள் வழமைபோன்று இடம்பெற்று வருகின்றது.
பஸ் சேவைகள் வழமைபோன்று இடம்பெற்றாலும் மக்களின் வரவு குறைந்த நிலையிலேயே காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

