
நாட்டில் தற்போது பயத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக தொடர்பாடல் செயற்பாடு தொடர்பான அமைப்பின் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிருஷாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் ,கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு சென்று திரும்புகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது பயத்தோடு பயனக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மக்களிற்கு பொருளாதார பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இன்று சுதந்திரம் என்று கூறினாலும் சுதந்திரமற்ற நாடாக காணப்படுகிறது. மக்களால் தனது தேவைகளை சுயமாக பூர்த்தி செய்ய முடியவில்லை.
அண்மையிலும் வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டது. இது தனி நபர் ஒருவரின் செயற்பாடாக தெரியவில்லை.குண்டு வெடிக்கும் என்ற அச்சம் இன்னமும் நீங்கவில்லை.இது தொடர்பில் கவனம் தேவை என்றார்.