
வீரவில சந்திக்கு அருகில் சந்தேகநபர் ஒருவர் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (03) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பின்போது, சட்டவிரோமான முறையில் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட குறித்த துப்பாக்கி 0.38 மில்லிமீற்றர் ரக ரிவோல்வரொன்றென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.