கணமூலை தெற்கு கிராமத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கணமூலை தெற்கு கிராமத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் இன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

கிராம உத்தியோகத்தர் எஸ்.ஏ.ஏ. முஹைதீன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் டபிள்யூ. எம்.எம். வசந்தி பெர்ணாந்து, முன்னாள் அமைச்சர் அருந்திக்க பெர்ணாந்துவின் இணைப்புச் செயலாளரும், ஸ்ரீ.பொ.ஜ பெரமுன கணமூலை அமைப்பாளருமான அலாவுதீன் அஸ்ரின் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது , கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரின் அலுவலக வளாகம் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டன.

கணமூலை , லதீப் மாவத்தை மற்றும் மிஹ்ராஜ் புரம் ஆகிய சமுர்த்தி சங்கங்களின் உறுப்பினர்கள் இந்த சிரமதானத்தில் கலந்துகொண்டனர்.

அத்துடன், சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஆசி வேண்டி விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றதுடன், மிஹ்ராஜ்புரம் பிரதான வீதியில் பயன்தரும் மரக் கன்றுகளும் இதன்போது நடப்பட்டன.

இதேவேளை , முந்தல் பிரதேச செயலாளர் விஜானி வசந்திகாவின் ஆலோசனையில் பிரதேச செயலகத்திற்குற்பட்ட சகல கிராம சேவகர் பிரிவுகளிலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் காலை விஷேட நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *