
கொழும்பு, பெப் 4: இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியாவில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் டிடிக் குர்னிஅவன், இலங்கை ராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவை இராணுவ தலைமையகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
1952 ஆம் ஆண்டுமுதல் இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் நட்பு ரீதியான இராஜதந்திர உறவுகள், சமய, கலாசார ஒற்றுமைகள் ஆகியன தொடர்பாக இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், இராணுவத்தினரால் படையினர்களால் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பாக கொமடோர் டிடிக் குர்னிஅவன் கேட்டறிந்தார் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.