
சமூக அரசியல் மற்றும் தேசிய பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வுகாணத் தவறியதன் காரணமாக நாடு ஸ்தீர தன்மையற்ற நிலைக்கு மாறியுள்ளதாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.
முஸ்லிம் – தமிழ் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் ஒருவரையொருவர் சமமாக நடத்தும் சூழலை உருவாக்குவதற்கான சட்ட மூலமொன்றை தயாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
30 வருட உள்நாட்டுப் போருக்குப் பிறகும் சிறுபான்மையினர் மொழிப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
பொலிஸ் நிலையம் நீதிமன்றம் அரசு நிறுவனங்கள் என பல இடங்களுக்குச் சென்றால் அங்கு தமிழ் மொழியில் சேவைகளை பெற்றுக் கொள்ள எம்மால் முடிவதில்லை.
குறித்த சேவைகளை காணப்பட்ட போதிலும், அந்த சேவைகளை அவ்வளவு எளிதில் தமிழ் மொழியில்பெற்றுக் கொள்ள முடியாக ஒரு நிலையே காணப்படுகின்றது.
சிறுபான்மைத் தமிழ் மக்களின் பிரதிநிதியாக நான் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றால் ஒரு அறிக்கையை தமிழில் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் பல மணி நேரம் காத்திருந்து பெற்றுக் கொள்ள வேண்டிதாக உள்ளது.
சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்சினை காணி பிரச்சிணையாக காணப்படுகின்றது.
நாட்டில் அந்த பிரச்சிணை தொடர்ச்சியாக காணப்படுகின்றன. இது தொடர்பில் இனவாதத்தின் அனுபவங்கள் எனக் குறிப்பிடலாம்.
வேலை வாய்ப்பொன்றை பெற்றுக் கொள்ள சென்றால் கூட அங்கும் சிறுபான்மையினர் புறக்கனிக்கப்படுவது ஒரு பாரிய பிரச்சினையாகவே உள்ளது.
மேலும் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் சிறுபான்மையினறும் பாரிய சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.
இப்போது நாடு ஸ்தீர தன்மைற்ற நாடாக மாறி வருகிறது. இதை சொல்வதற்கும் வெட்கமாகதான் இருக்கின்றது.
ஆனால் அது தான் உண்மை எவ்வாறாயினும் இந்த நாட்டில் தேசிய பிரச்சினைகள் தீர்க்கப்படாத காரணத்தினால் தான் இந்த ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து நான் வருந்துகிறேன் .
ஒரு பொறுப்புள்ள இலங்கையர் என்ற ரீதியிலும் அரசியல் கட்சியின் தலைவர் என்ற ரீதியிலும் இதை நான் வலியுறுத்த வேண்டும்.
இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்கள் கண்ணியத்துடனும் சமத்துவத்துடனும் வாழக்கூடிய சூழலை உருவாக்கி தேசியப் பிரச்சினையை சுமுகமான முறையில் தீர்த்து வைப்பதற்கு நாம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் .
சிங்கள சகோதரர்களுடன் இணைந்து ஒரே குடும்பத்தில் சகோதர சகோதரிகளாக வாழ்வதற்கான சரியான அரசியல் சூழலை உருவாக்க வழிவகுக்கக்கூடிய ஒரு ஆவணத்தைத் தொகுக்க முயல்கிறோம்.
சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கான ஒரு கருவியாக பாதுகாப்பைப் பயன்படுத்துவது சிறுபான்மை சமூகங்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையாகும்.
உள்நாட்டுப் போரின் போது தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. தற்பொது உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு முஸ்லிம்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகிறது.
எனவே சிறுபான்மையினர் வழக்கமான மற்றும் தினசரி அடக்குமுறைகளை எதிர்கொள்கின்றனர்- என்றார்
தனது கணவரை பெண்ணொருவர் ஏலம் விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்தின் டிரேட் மீ என்ற இணையதளத்தில் அண்மையில் வந்த விளம்பரத்தைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதாவது, அயர்லாந்தை சேர்ந்த லிண்டா மலிஸ்டர் என்ற பெண், தனது கணவர் ஜான் மலிஸ்டர் என்பவரை ஏலத்தில் விற்பனை செய்யவுள்ளதாக இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டிருந்தார்.
அந்த விளம்பரத்தில், ஜானுக்கு 37 வயது ஆகிறது. இவர் 6.1 அடி உயரம் கொண்டவர். இவர் மாடு வளர்ப்பு தொழில் செய்து வருகிறார். இதற்கு முன்பு இவருக்கு ஏராளமான உரிமையாளர்கள் உண்டு.
அவருக்கு முறையாக இரை வைத்து, தண்ணி காட்டினால் மிகுந்த விசுவாசத்துடன் இருப்பார். ஆனால், இன்னும் சில வீட்டு பயிற்சி இவருக்கு தேவைப்படுகிறது.
ஆனால், எனக்கு அதற்கான பொறுமையோ, நேரமோ கிடையாது. இந்த விற்பனை இறுதியானது. ரிட்டன் அல்லது எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளப்பட மாட்டாது, என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டிருந்தது. இந்த விஷயம் தனது நண்பர்கள் மூலமாக ஜானுக்கு தெரியவந்தது.
ஆனால் இதையெல்லாம் கேட்டு சிரிப்பதை தவிர வேறு வழியில்லை என்றார் அவர். ஏனெனில் அவர் இதற்கும் மேல் நடக்கும் என எண்ணியிருந்தார். ஏல விளம்பரம் வெளியான ஒரு மணி நேரத்தில் 12 பேர் அதற்கு ஏலம் கேட்டிருந்தனர். ரூ.5 ஆயிரம் வரை விலை கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை வர்த்தக விதிகள் மீறப்பட்டதாகக் கூறி, டிரேட் மீ இணையதளம் அந்த விளம்பரத்தை நீக்கியதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் அந்த விளபரத்தை பார்த்த பலரும் இப்படியும் நடக்குமா என்று ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
தனது கணவரை பெண்ணொருவர் ஏலம் விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தின் டிரேட் மீ என்ற இணையதளத்தில் அண்மையில் வந்த விளம்பரத்தைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதாவது, அயர்லாந்தை சேர்ந்த லிண்டா மலிஸ்டர் என்ற பெண், தனது கணவர் ஜான் மலிஸ்டர் என்பவரை ஏலத்தில் விற்பனை செய்யவுள்ளதாக இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டிருந்தார்.
அந்த விளம்பரத்தில், ஜானுக்கு 37 வயது ஆகிறது. இவர் 6.1 அடி உயரம் கொண்டவர். இவர் மாடு வளர்ப்பு தொழில் செய்து வருகிறார். இதற்கு முன்பு இவருக்கு ஏராளமான உரிமையாளர்கள் உண்டு.
அவருக்கு முறையாக இரை வைத்து, தண்ணி காட்டினால் மிகுந்த விசுவாசத்துடன் இருப்பார். ஆனால், இன்னும் சில வீட்டு பயிற்சி இவருக்கு தேவைப்படுகிறது.
ஆனால், எனக்கு அதற்கான பொறுமையோ, நேரமோ கிடையாது. இந்த விற்பனை இறுதியானது. ரிட்டன் அல்லது எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளப்பட மாட்டாது, என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டிருந்தது. இந்த விஷயம் தனது நண்பர்கள் மூலமாக ஜானுக்கு தெரியவந்தது.
ஆனால் இதையெல்லாம் கேட்டு சிரிப்பதை தவிர வேறு வழியில்லை என்றார் அவர். ஏனெனில் அவர் இதற்கும் மேல் நடக்கும் என எண்ணியிருந்தார். ஏல விளம்பரம் வெளியான ஒரு மணி நேரத்தில் 12 பேர் அதற்கு ஏலம் கேட்டிருந்தனர். ரூ.5 ஆயிரம் வரை விலை கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை வர்த்தக விதிகள் மீறப்பட்டதாகக் கூறி, டிரேட் மீ இணையதளம் அந்த விளம்பரத்தை நீக்கியதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் அந்த விளபரத்தை பார்த்த பலரும் இப்படியும் நடக்குமா என்று ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.