
இலங்கையின் 74வது சுதந்திர தினமான இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவால் கம்பஹா அகரகம வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் 1,589,000 ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் இதன் போது கையளிக்கப்பட்டுள்ளன.
சமகி ஜன பலவேக நாடாளுமன்றக் குழு, அமைப்பாளர்கள், உறுப்பினர்கள், சமகி ஜன பலவேகவின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆதரவாளர்களின் ஆதரவுடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 42 செயற்திட்டங்கள் 1176 லட்சம் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் Multipara Monitor, Stethoscope , ECG Machine ,ICU Bed ,Sphygmomanometerஆகிய உபகரணங்கள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
நிகழ்வில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா கருத்து தெரிவிக்கையில்:
கோவிட் தொற்றுநோய் அபாயத்தை முன்கூட்டியே பாராளுமன்றத்தில் நாம் அறிவித்தோம்.
முகக் கவசங்களின் முக்கியத்துவம், வெளிநாட்டில் இருந்து நாட்டிற்குள் நுழையும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் நோய்க்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்தும் நாம் முற்கூட்டியே தெரிவித்தோம்.
ஆனால் அப்போது இந்த அரசு ஏளனமாகவும் எளிதாகவும் சிரித்தார்கள்.ஆனால் நாம் சொன்னது உண்மை என்பதை உணர்ந்து விட்டனர் என்றார்.

