திருமலையில் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான தொழிற் சந்தை!SamugamMedia

இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் மாபெரும் பிரதேச தொழிற்சந்தை திருகோணமலை – தோப்பூர் உப பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஜனாப் MBM. முபாறக் தலைமையில் இன்று நடைபெற்றது.

இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தினை மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் திறன்அபிவிருத்தி அமைச்சு இணை அனுசரனை வழகியதுடன், மாவட்ட மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக திறன் விருத்தி அபிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக ஏனைய வெளிக்கள உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்டதில் உள்ள பல்வேறுபட்ட அரச சார்பற்ற நிருவனங்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கிருந்தார்கள். 
 
இவ் தொழிற் சந்தையில்மூதூர் மற்றும் தோப்பூர் பிரதேசத்தில் வேலையற்றிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகள் கலந்து கொண்டு பயனடைந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Leave a Reply