
இந்தியக் கடற்பரப்பிற்குள் கைது செய்யப்பட்ட வடமராட்சி மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்படவிருந்த நிலமையில் இறுதி நேரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
வடமராட்சியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற சமயம் படகு இயந்திரக் கோளாறு காரணமாக இந்திய எல்லைக்குள் சென்ற காரணத்தினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செ்யப்பட்ட இருவரும் இன்றை தினம் 4ஆம் திகதி படகுடன் விடுவிக்க ஏற்பாடாகியிருந்தது.
இதனிடையே தற்போது நிலவும் இந்திய – இலங்கை மீனவர்களிடையேயான முறுகல் நிலமையால் இரு மீனவர்களின் விடுதலையை ஒத்தி வைக்குமாறு நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது.