எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
தடுப்பூசி போடப்படாதவர்கள் பொது இடங்களுக்குள் செல்வதை தடுக்கும் வகையில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

