கைக்கு எட்டியதை வாய்கு எட்டத்தெரியாத சஜித் – சபையில் காட்டமான – அமைச்சர் ஹரின்! SamugamMedia

கைக்கு எட்டியதை வாய்கு எட்டத்தெரியாத சஜித் பிரேமதாச இன்று சர்வதேச நாணயநிதியத்திடம் செல்லுமாறு குறிப்பிடுவதாகவும் வாயளவிலேயே அவரின் வீரம் உள்ளதாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெனாண்டோ சபையில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இந்த நாடை பொறுப்பேற்குமாறு கோரிக்கை விடுத்த போது பின்வாங்கிய சஜித் பிரேமதாச இன்று சபையில் வீர வசனங்களை பேசுவதாகவும் அமைச்சர் ஹரின் பெனாண்டோ குற்றம் சுமத்தியிருந்தார்.

இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கவலையாக உள்ளதாகவும் ஏன் என்றால் இவர்களுக்கு சர்வதேச நாணயநிதியத்தில் உதவி கிடைத்துவிட்டதாகவும் தாம் தொலைந்து விட்டோம் என கருதுவதாகவும் அமைச்சர் ஹரின் பெனாண்டோ குறிப்பிட்டிருந்தார்.

இந்த உதவியில் மகிழ்ச்சி அடைய முடியாதெனவும் இன்னும் நீண்ட தூரம் பயணிக்கவேண்டியுள்ளதாக அமைச்சர் ஹரின் பெனாண்டோ சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நாடு ஒரு அழிவடைந்த நாடு என்றும் இதற்கு அனைத்து கட்சிகளும் பொறுப்புகூற வேண்டும் என்றும் அமைச்சர் ஹரின் பெனாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *