
நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயம் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலின் குண்டுதாரியான மொஹம்மட் ஹஸ்தூனின் மனைவியான, 2 ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்ததாக கூறப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் அல்லது சாரா ஜஸ்மின் அல்லது சாரா தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் என்.ரி. அபூபக்கரை பிணையில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.