இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு வந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் இழுவைமடி தொழிலை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும், இந்திய மீனவர்கள் இலங்கையின் வட பகுதியில் மீன்பிடிப்பதற்காக இலங்கை அரசு அனுமதி அளிப்பதாக கூறியிருப்பதை உடனடியாக வாபஸ் பெற வேண்டுமென கோரி மன்னாரில் இன்று பேரணி இடம்பெற்றது.
வடக்கு மீனவர்கள் (யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு), சிவில் அமைப்புகள், மன்னார் கத்தோலிக்க திருச்சபை, பெண்கள் அமைப்பினர் ஆகியோர் இணைந்து நடைப்பாதை ஒன்றை நாடாத்தி பேரணியில் கலந்துகொண்டனர்.
அத்துடன் ஜனாதிபதி மற்றும் இராஜாங்க அமைச்சரிடம் கையளிக்குமாறு மாவட்ட பிரதி செயலாளரிடம் கோரிக்கை மனுவும் கையளிக்கப்பட்டது.
இதற்கு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் பெரும் ஆதரவை வழங்கியது.