நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு!

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.

அதனபடி, ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் விலை 3 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, 121 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்று 124 ரூபாய் என்ற புதிய விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், 92 எல்.பீ ரக பெட்ரோல் லீட்டரொன்று 7 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், 184 ரூபாய் என்ற புதிய விலைக்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, 95 ஒக்டென் ரக பெட்ரோல் 3 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 213 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *