
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு தலைமை வகித்ததாக கூறப்படும் பிரதான தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாசிமின் மனைவியான பாத்திமா ஹாதியாவை பிணையில் விடுவித்து கடந்த15 ஆம் திகதி கல்முனை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் அதிலிருந்து 48 மணி நேரம் கடந்த நிலையிலேயே அதாவது, 17 ஆம் திகதி மாலை 5.45 மணியளவிலேயே அவர் சிறையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார்.