கோட்டா விடயத்தில் தவறு செய்துவிட்டோம்! மனம் திறந்த பவித்ரா SamugamMedia

அரசியல் தெரியாத கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்து அன்றொரு நாள் தவறு செய்துவிட்டோம் என நாடாளுமன்ற பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன பண்டாரகம அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவிற்கு அரசியல் தெரியாது என்பதினை அன்றும் சொன்னேன் இன்றும் சொல்கிறேன். அந்த தவறுக்கு பிறகு கட்சிக்குள் பல சுயவிமர்சனத்துக்குச் சென்று மீண்டும் அந்த தவறைச் செய்ய மாட்டோம் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இதன் பின்னர் அரசியல் செய்யாத ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக வரமாட்டார் என்ற முடிவுக்கு வந்தோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *