யாழ் மாவட்டத்தில் போதை பொருள் பாவனையினை கட்டுப்படுத்தல் மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துதல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்று யாழ் மாவட்ட செயலககேட்போர் கூடத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
கடற்தொழில் அமைச்சரின் ஏற்பாட்டில் இடம்பெறும் குறித்த கூட்டத்தில் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் ராணுவ, கடற்படை, பொலிஸ் உயரதிகாரிகள் பிரதேச செயலர்கள் துறை சார்ந்த திணைக்களங்களில் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். குறித்த கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் வீடியோ எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.