திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பினால் புல்மோட்டை,திருமலை பட்டினமும் சூழலும், கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவிற்குற்பட்ட பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட குடும்ப பெண்களுக்கான வாழ்வாதார திட்டத்தின் கீழ் மிளகாய் தூள் வியாபாரம், சிற்றூண்டி வியாபாரம், கருவாடு உற்பத்தி, இடியப்ப வியாபரங்களுக்கான பொருட்கள் இன்று புதன்கிழமை (05) வழங்கிவைக்கப்பட்டன.
திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரனி பிரசாந்தினி உதயகுமார் அவர்களினால் இவ் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.