மக்களுக்கு புத்தாண்டு பரிசு காத்திருக்கிறது- முக்கிய அமைச்சர் கருத்து..!samugammedia

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதன் காரணமாக இலங்கையில் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த புத்தாண்டுக்கு முன்னர் பொருட்களின் விலைகள் மேலும் குறையும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்வருடம் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும், அரிசியின் விலை மேலும் குறையும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை இன்று முதல் குறைத்துள்ளது.

இதன்படி, 425g டின்மீனின் புதிய விலை 490 ரூபாவாகும். இதன் விலை குறைப்பு ரூ.30. ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் புதிய விலை 97 ரூபாவாகவும், விலை குறைப்பு 22 ரூபாவாகும். ஒரு கிலோ கோதுமை மாவின் புதிய விலை 225 ரூபாவாகும். விலை குறைப்பு 10 ரூபாய்.

கடந்த வாரமும் 12 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply