தமிழ் புத்தாண்டில் கைலாய வாகனத்தில் பவனிவந்த நயினை நாகபூசணி அம்மன்! samugammedia

வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் சோபகிருது வருடப்பிறப்பை முன்னிட்டு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (14) காலை அம்மனுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.

விசேட பூசை வழிபாடுகளை தொடர்ந்து நாகபூசணி அம்மன் , கைலாய வாகனத்தில் உள்வீதி மற்றும் வெளிவீதியில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்நிலையில் சோபகிருது சித்திரைப் புத்தாண்டில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருளை பெற்றனர்.


2023 தமிழ் – சிங்கள சித்திரைப்புத்தாண்டு நாடளாவிய ரீதியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *