தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டு காலத்தை உள்ளடக்கிய ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் வீதி விபத்துக்களால் 14 மரணங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் பெருமளவானோர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
வாகன சாரதிகளை எச்சரிக்கையுடன் இருக்கவும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.