13 தொடர்பில் விக்னேஸ்வரன் இல்லத்தில் கலந்துரையாடல் – ஆளுநரும் பங்கேற்பு

13வது திருத்தத்திலுள்ள அதிகாரங்கள் தொடர்பில், மத்திய அரசாங்கத்திற்கும், மாகாணத்துக்கும் உள்ள நிர்வாக நடைமுறைகள் தொடர்பில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சிவி விக்னேஸ்வரன் இல்லத்தில் நேற்று(திங்கட்கிழமை) கலந்துரையாடல்  இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, முன்னாள் வடக்கு கிழக்கு இணைந்த மாகாண முதலமைச்சரின் செயலாளர் கே.விக்னேஸ்வரன், முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *