
கண்டி -அக்குரணை பகுதியில் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் நடாத்தப்படலாம் என்ற உளவுத் தகவலை அடுத்து, அப்பகுதி பூரண இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று (18) இரவு முதல் இந்த பாதுகாப்பு நடைமுறை அமுல் செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ விடிவெள்ளியிடம் தெரிவித்தார்.