ஹர்த்தாலினால் மட்டக்களப்பும் முடங்கியது!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தாலையடுத்து அனைத்து வர்த்தக நிலையங்கள், பொதுசந்தைகள் மூடப்பட்டு போக்குவரத்து இன்றி வீதிகள் வெறிச்சோடி மாவட்டத்தில் அனைத்து நிர்வாக செயற்பாடுகளும் இன்று(செவ்வாய்க்கிழமை) முடங்கியுள்ளது.

புதிய உத்தேச பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஹர்த்தாலுக்கு இன்று அழைப்பு விடுத்தனர்.

இதனையடுத்து இன்று மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேசங்களிலும் வர்தக நிலையங்கள் மற்றும் பொது சந்தைகள் முற்றாக மூடப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளுக்கு மாணவர்கள் எவரும் சமூகமளிக்காததையடுத்து பாடசாலைகள் முடங்கியுள்ளன.

போக்குலரத்து இடம்பெறாததையடுத்து வீதிகள் வெறிச்சோடி காணப்படுவதுடன், அனைத்து செயற்பாடுகளும் முற்றாக முடங்கியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *