அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மே தினக் கூட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று(01) இடம்பெற்றது.
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேதினக் கூட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாண ஜீவோதய நலன்புரி நிறுவனத்தினரும் கலந்து கொண்டனர்.
இதன்போது ஊழியர் நலன் சார் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருந்தன.