
நீர் கொழும்பு – படல்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்பே பகுதியில் ஓமான் முதலீட்டாளர் ஹல்பான் அல் அல் உபைதி மீது இராஜாங்க அமைச்சர் ஒருவரின் அரசியல் அதிகார பின்னணி கொண்ட கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியமை மற்றும், அவரது ஆடை தொழிற்சாலை மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புக் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுக்கும் நிலையில், அந்த ஆடை தொழிற்சாலை கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்துக்கு இடமாற்றப்படவுள்ளது.