நடுத்தர வர்க்கத்தினருக்காக 866 வீடுகள் கொண்ட ஐந்து வீட்டுத் திட்டங்கள்! samugammedia

நடுத்தர வர்க்கத்தினருக்காக அடுத்த மூன்று வருடங்களில் 25 பில்லியன் ரூபா பெறுமதியான ஐந்து வீடமைப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

866 வீடுகளைக் கொண்ட இந்த வீடமைப்புத் திட்டம் வெலிசர, நிட்டம்புவ, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, அதுருகிரிய மற்றும் கடுவெல பிரதேசங்களில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த வீட்டுத்திட்டங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன.

இந்த ஐந்து வீடமைப்புத் திட்டங்களில் நிட்டம்புவ மற்றும் வெலிசர வீடமைப்புத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் இந்த வருடத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

மூன்று வீடமைப்புத் திட்டங்களும் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நிட்டம்புவ வீடமைப்புத் திட்டம் கிராம அமைப்பின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வரும் விசேட திட்டமாகும். நாட்டின் அபிவிருத்திக்காக பங்களிப்புச் செய்த அரச மற்றும் தனியார் துறை பிரஜைகளுக்கு இது ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *