நாட்டை விட்டு திடீரென வெளியேறிய சர்ச்சைக்குரிய போதகர்..!samugammedia

கிறிஸ்தவ மதப் போதகர் ஜெரோம் ஃபேர்ணாண்டோ நாட்டிலில் இருந்து வெளியேறியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அவர் இந்து, பௌத்த மதங்களை நிந்தனை செய்யும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

பௌத்த மதத்தை நிந்தித்தமைக்காக அவரை விசாரணைக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நேற்று உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை அவர் சிங்கப்பூர் செல்லும் விமானம் ஒன்றில் நாட்டிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *