திருகோணமலை – குச்சவெளி காசிம்நகர் பகுதியில் பொலிஸாருடன் இணைந்து இலங்கை கடற்படையினர் (22) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, வாட்டர் ஜெல் (Water Gel) எனப்படும் வெடிபொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகத்துக்கு இடமான வீடு சுற்றிவளைக்கப்பட்டது.
அங்கிருந்து 54 வாட்டர் ஜெல் மற்றும் மின்சாரம் அல்லாது பயன்படுத்தக்கூடிய டெட்டனேட்டர்கள் 40ம் கைப்பற்றப்பட்டன.