
இலவசக் கல்வியை கருப்பொருளாக கொண்டுள்ள இலங்கையின் கல்வி முறையானது தற்போது மிகவும் இக்கட்டான ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நவீன் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முழு உலகமும் மாறிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இலங்கையின் கல்வி நிலையானது இன்னமும் அவற்றை சரியான முறையில் அணுகுவதற்கு முடியாமல் தடுமாறிய வண்ணமே உள்ளது.

