கிளிநொச்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி, செல்வாநகர் புதுக்குளம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த குளத்தில் சடலம் காணப்படுவது தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் சிறு குற்றப் பிரிவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய வெள்ளைக்கண்ணு குணசேகரம் எனும் 6 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *