ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சரவை அமைச்சருமான மறைந்த ரெஜி ரணதுங்கவின் 15வது நினைவு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானம் வழங்கும் நிகழ்வு ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் நேற்று (07) இடம்பெற்றது. மீரிகமவிலுள்ள “செத் செவன” அரச முதியோர் இல்லத்தில் இடம்பெற்றது.
உடுகம்பல, விகொட தம்மயுக்திகாராம விஹாராதிகாரி மொரகஹபல்லமே சாந்த தேரர் பிரசங்கத்தில் கலந்துகொண்டார்.
மீரிகம “செத் செவன” முதியோர் இல்லம் மேல் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. தற்போது, 157 பெரியவர்கள் இங்கு வசிக்கின்றனர்.
இங்கு 52 பணியாளர்கள் உள்ளனர். இதுவே மேல் மாகாணத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான ஒரே முதியோர் இல்லமாகும்.
மறைந்த ரெஜி ரணதுங்கவின் சகோதரர் டேனி ரணதுங்க மற்றும் குடும்பத்தினரின் நெருங்கிய நண்பர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


