பொலிஸாருடன் ஏற்பட்ட கைகலப்பு..! துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது…! samugammedia

பொலிஸாரின் கைது நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

காலி, ஊரகஸ்மங்ஹந்திய பகுதியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரை கைது செய்ய முற்பட்ட வேளை, பொலிஸாருடன் ஏற்பட்ட கைகலப்பை அடுத்து இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *