
வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சிங்களமாயமாக்கல் செயற்பாடுகள் தீவிரமடைந்து வருவதை அண்மைக் கால சம்பவங்கள் உணர்த்தி நிற்கின்றன. சிறுபான்மை மக்களின் பூர்வீக நிலங்களில் புத்தர் சிலைகளை வைப்பதும் தொல்பொருள் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் காணிகள் அபகரிக்கப்படுவதும் தொடர் கதையாகியுள்ளது.

