
நாட்டில் மாடுகளுக்கு தொற்று நோய் பரவல் அதிகரித்து நெருக்கடியான நிலைமையொன்று ஏற்பட்டுள்ள நிலையில் உழ்ஹிய்யா விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மார்க்கத் தீர்ப்பு (பத்வா) ஒன்றை உடனடியாக வழங்க வேண்டும் என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் முஸ்லிம் சமய விவகார அமைச்சருமான அப்துல் ஹலீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

