மூளைச் சாவடைந்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு..! யாழில் சம்பவம்..!samugammedia

உடல் சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று(15)  உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் உடல் சுகயீனம் காரணமாக கடந்த 7ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.
மூளாய் வேரம் பகுதியைச் சேர்ந்த ஜெனார்த்தனன் கனிஷ்ரிகா (வயது 25) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மூளை சாவடைந்தே அவர் உயிரிழந்துள்ளளதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *