ரணில் அரசால் ஒருபோதும் முடியாது – ஐக்கிய மக்கள் சக்தி! samugammedia

ரணில் – ராஜபக்ச அரசாங்கத்தினால் இந்நாட்டை ஒருபோதும் மீட்க முடியாதென ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.

எனவே, உடனடியாக தேசிய மட்டத்திலான தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே லக்ஸ்மன் கிரியல்ல இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

சர்வதேச உதவி கிடைக்கும் என ஆட்சியாளர்கள் கூறினாலும், குறிப்பிட்டுக் கூறுமளவுக்கு இன்னும் உதவி கிடைக்கவில்லை.

அத்துடன், நாட்டை மீட்பதற்காக எதிரணிகள் ஒன்றிணைந்து செயற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *