
முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களில் சமயக் கடமைகளில் தொடராக சவால்களை எதிர்கொண்டு வருகிறது. கொவிட் 19 தொற்று பரவிய காலகட்டத்தில் ஐவேளை தொழுகை மற்றும் ஜும்ஆ தொழுகைகளை பள்ளிவாசல்களில் நிறைவேற்றுவதில் நாம் பல கட்டுப்பாடுகளை, சிரமங்களை எதிர்கொண்டோம். புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கும் பல சுகாதார விதிமுறைகள் விதிக்கப்பட்டன. ஹஜ் யாத்திரிகர்களின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டன.

