அல்லைப்பிட்டி மேலும் சில மனித எச்சங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் மேலும் சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அல்லைப்பிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட கட்டுமானப் பணிகளின்போது மண்டை ஓட்டுத் துண்டுகளும் இரு எலும்புகளும் மீட்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஊர்காவற்துறை பொலிஸார் குறித்த பிரதேசத்தை குற்றம் நிகழ்ந்த பிரதேசமாக அடையாளப்படுத்தி நீதிமன்றக் கட்டளையைப் பெற்றிருந்தனர்.

ஊர்காவற்துறை நீதிவான் கஜநிதிபாலன் முன்னிலையில் குறித்த குழி மேலதிகமாக அகழப்பட்ட நிலையில் 27 பற்கள் உட்பட ஒரு மனித எலும்புகூடு எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன.

இதன்போது மேலதிகமான எச்சங்கள் இல்லாத நிலையில் குறித்த சான்றுப் பொருட்கள் ஆய்விற்காக அனுப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குறித்த மனித எச்சங்கள் சுமார் 20 வருடங்களுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *